24 663d89cb83ba1
இலங்கைசெய்திகள்

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

Share

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க ஜெல் கையிருப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் கையிருப்பின் மொத்த எடை ஒரு கிலோ 975 கிராம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனது காலணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து மூன்று பொதிகளில் தங்க கையிருப்பை கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த பயணியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...