24 663d89cb83ba1
இலங்கைசெய்திகள்

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

Share

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க ஜெல் கையிருப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் கையிருப்பின் மொத்த எடை ஒரு கிலோ 975 கிராம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனது காலணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து மூன்று பொதிகளில் தங்க கையிருப்பை கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த பயணியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...