24 667384a833b24
இலங்கைசெய்திகள்

அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்: விசாரணையில் தகவல்

Share

அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்: விசாரணையில் தகவல்

பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது.

இதன்போது 200 கசிப்பு போத்தல்கள் மற்றும் 1250 லீற்றர் கோடாவுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 48 வயதுடைய தாயும் அவரது 26 வயது மகளும் கசிப்பு கடத்தல் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதால் பேராதனை போவல பேருந்து வீதியில் இருந்து சுமார் 1 1/2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சல்களை நடத்தி வந்துள்ளனர்.

கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவின் மேற்பார்வையில் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...