25 69361c3bb973c
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு – மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தகவல்!

Share

கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள் காரணமாக 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகூன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (டிசம்பர் 7) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.நேற்று (07) நிலவரப்படி, 25 மாவட்டங்களையும் பாதித்த மோசமான வானிலை காரணமாக 627 பேர் உயிரிழந்ததாகவும், 190 பேர் காணாமல் போனதாகவும் பேரிடர் மேலாண்மை மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (232) பதிவாகியுள்ளன.
நுவரெலியா (89), பதுளை (90), குருநாகல் (61), கேகாலை (32), புத்தளம் (35) மற்றும் மாத்தளை (28) ஆகிய இடங்களில் மரணங்களின் எண்ணிக்கை கவலைக்குறிய வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் காரணமாக 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...