13 21
இலங்கைசெய்திகள்

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக கண்ணீருடன் கூடிய பெருமளவான மக்கள்

Share

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக கண்ணீருடன் கூடிய பெருமளவான மக்கள்

மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது.

பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று கூடிய பெருமளவான மக்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீரால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் மற்றும் இரா.சாணக்கியனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...