20 10
இலங்கைசெய்திகள்

வன்முறை சம்பவங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: தேசிய மக்கள் சக்தி சந்தேகம்

Share

வன்முறை சம்பவங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: தேசிய மக்கள் சக்தி சந்தேகம்

செப்டம்பர் 18ம் திகதி பிரசார நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவுக்குப் பின்னர், எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை, தேசிய மக்கள் சக்தியினராக காட்டிக்கொண்டு வன்முறைச் சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் வன்முறைச் சம்பவங்களை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசியல் மேடைகளில் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையிலேயே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கூறுபவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்களை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்புப் தரப்பினரிடம் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 18க்கு பிறகு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பற்றி பேச ஊடக நிறுவனங்களும் சிரமப்படுகின்றன.

இதன்போதே சதிகாரர்கள், தேசிய மக்கள் சக்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கலாம் என்று ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தாக்குதலை உருவாக்கியவர்களுக்கு இது பெரிய விடயமல்ல என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...