tamilni 271 scaled
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

Share

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த போது 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி வலஹங்குவே தம்மரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

300 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணம் ஜே.வி.பிக்கு கிடைத்துள்ளதாக தமக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

89-90ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரை கூட கொண்டுவரக் கூடாது என ஜே.வி.பி. இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை பின்பற்றியது என என தெரிவித்துள்ளார்.

துறைமுகம், விமான நிலையம், வங்கிகள், மின்சாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்க்பபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உள்நாட்டு சொத்துக்கள் விற்பனை செய்வதனை எதிர்த்த ஜே.வி.வி. தற்பொழுது விலை மனுக் கோரி விற்பனை செய்யுமாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரகுப் பணத்திற்காக ஜே.வி.பி இவ்வாறு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் கஸ்டங்களை கண்டு கொள்ளாத அரசாங்கத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை என மிஹிந்தலை விஹாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...