24 6648558c61193
இலங்கைசெய்திகள்

நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங்

Share

நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங்

இலங்கையின் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் ஐக்கியமாக இருப்பதாக அமெரிக்கா(United States) உறுதியளித்துள்ளது.

இது தொடர்பில் எக்ஸ் பதிவில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), நீதி சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து தேடும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா உறுதியான பங்காளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...