24 666124ee0aaf5
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள ஊடகவியலாளர்

Share

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள ஊடகவியலாளர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மோதரை பகுதியில் கடற்கரையில் நேற்று (5 ஆம் திகதி) சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்துனில் ஜயவர்தன என்ற ஊடகவியலாளர் என மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல்போயுள்ளதுடன், இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சடலம் மோதரை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்திற்கான காரணம், உயிரிழந்த விதம்தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...