24 665d551042f4c
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணையப்போகிறீர்களா..! மனைவி மூலம் சஜித்

Share

அரசுடன் இணையப்போகிறீர்களா..! மனைவி மூலம் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிரேஷ்ட எம்.பி ஒருவர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளாரா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) தொலைபேசி மூலம் கேட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தடவைகள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சித் தலைவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஊடாக உறுப்பினருடன் தொடர்பு கொண்டு அவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப்போகிறீர்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் தான் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டுச் செல்லவே மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல அரசாங்கங்களில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த மேல் மாகாணத்தின் பிரதிநிதியாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...