31 8
இலங்கைசெய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Share

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தயார் என நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு வாகனமானது கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க கால அவகாசம் கோரியிருந்தநிலையில் அவர் இன்று திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவி்திருந்தார்.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அவரது சட்டத்தரணி நீதிமன்றில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த வாகனம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் பயன்படுத்தப்பட்டதா? என நீதியரசர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் கால பிரசார செயற்பாடுகளுக்காகக் குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும்,  வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டில் ஜோன்ஸ்டன்

Share
தொடர்புடையது
images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...