13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

Share

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் உப பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.வீரசிங்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான நிரோஜன் (8137), தீபன் (80998) அடங்கிய குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 3
செய்திகள்அரசியல்இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம்: மஹிந்த ராஜபக்ச தலைமையில் முக்கிய ஆலோசனை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

21 6
உலகம்செய்திகள்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட மனிதாபிமான நடவடிக்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் விபத்துக்குள்ளான அல்லது தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த...

22 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கைக்கான பயண அறிவுறுத்தல் மாற்றப்படவில்லை: அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு!

இலங்கை, அவுஸ்திரேலியர்களுக்கான “உயர் அவதானம் தேவைப்படும் சுற்றுலாத் தலமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும்...

18 6
இலங்கைஅரசியல்செய்திகள்

இலங்கையை மோதல் களமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக விமல் வீரவன்ச சந்தேகம்: கொழும்பில் ஊடக சந்திப்பு!

ஈரான் போர்க்கப்பல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையை...