14 13
இலங்கைசெய்திகள்

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

Share

குழந்தை பிறப்பில் வீழ்ச்சி : ஜப்பான் அரசின் அதிரடி நடவடிக்கை

ஜப்பான் (japan)நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு பதிவானதை விடவும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் முதல் கட்டமாக இந்த சலுகை கொண்டு வரப்பட உள்ளதாகவும், இதனை அடுத்து படிப்படியாக தனியார் நிறுவனங்களுக்கும் இந்த சலுகை கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்பதால் உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும், இந்த சலுகை காரணமாக அடுத்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

ஜப்பான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் திருமண உறவில் மற்றும் குழந்தை பெறுவதில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...