13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான்

Share

இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தூதர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

முன்னதாக, சில ஜப்பானிய நிறுவனங்கள், இலங்கையில் முதலீடுகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக செய்திகள் வந்தன.

ஜப்பானிய நிறுவனங்கள் இணக்கக் கடமைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றன. அவை ஒருபோதும் இலஞ்சம் அல்லது கையூட்டுகளை வழங்குவதில்லை.

எனவே, இந்த விடயத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஜப்பானிய தூதர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் உள்ள அரசியல்வாதிகள் எந்த வகையான ஊழலிலும் ஈடுபடவில்லை என்ற ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளித்த அவர், அரச அதிகாரிகள் மட்டத்திலும் அதே பிரச்சினையை நிவர்த்திக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...