6 54
இலங்கைசெய்திகள்

போதை ஒழிப்பு விவகாரம் : யாழ் பல்கலை கலைப்பீடத்தின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரள அழைப்பு

Share

போதை ஒழிப்பு விவகாரத்தில் பதவியை துச்சமென துறந்த கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினதும்(raguram) போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னாலும் ஓட்டுமொத்த தமிழ் சமூகமும் அணிதிரள வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று தமிழர் தாய்நிலத்தில், யாழ் பல்கலைக்கழக(university of jaffna) சமூகத்தில் தோன்றியுள்ள மிகப்பாரதூரமான விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழ் அமைப்புக்களும் தலைவர்களும் கற்றறிந்த சமூகமும் ஆழமாக கரிசனை கொள்ள வேண்டும்.

யுத்தம் தின்ற தாய்மண்ணை போதை, மது, கலாச்சார சீரழிவு எனும் அரக்கர்கள் கபளீகரம் செய்வதை எதுவரை எமது சமூகம் பொறுமையாக கையாளப்போகின்றது? வெளிப்படையாகவே போதை சார் ஒழுக்க விழுமியங்களிற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு, அதில் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் இருந்தமைக்காக ஒரு பீடாதிபதி மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை பாரதூரமான, எமது சமூகத்தின் ஒழுக்க நெறியை கேள்விக்குறியாக்கும், நன்னடத்தைசார் விழுமியங்களிற்கு தமிழ் சமூகத்தின் அறிவுப்புலத்தில் விடுக்கப்பட்ட பாரிய சவாலாகும்.

கடந்த 15ஆண்டுகளில் போதையின் பிடியில் சிக்கி தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக மாணவ சமூகம் படும் அவலம் வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. பல பெற்றோர் நடைபிணங்களாக வாழ்கின்றனர். தினம் தினம் விபத்துக்களும் தற்கொலைகளும் இளவயது நெறிபிறழ்வுகளும் கல்வியிலிருந்து இடைவிலகல்களும் எம் தாய்மண்ணில் போதை எனும் அரக்கனால் மலிந்துவிட்ட நிலை கண்டு சமூக, தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மனதினுள் அழுத வண்ணமே உள்ளனர்.

இந்த நிலையில் போதைக்கெதிராக பல்கலைக்கழகத்தில் பலமான குரல்கள் எழுந்திருப்பது கற்றறிந்த தமிழ் தேசியத்திலும் சமூகசிந்தையிலும் ஆழமாக ஊறிய சமூகத்தின் மாற்றத்திற்கான திறவுகோலான ஊடகபின்புலத்திலிருந்து வந்த பேராசிரியர் ஒருவரின் செயலினூடாக வெளிப்பட்டு இருப்பது அவருக்கு பின்னால் யாழ் பல்கலையின் மிகப்பெரும் மாணவ சக்தியான கலைப்பீட மாணவர் ஓன்றியம் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது தமிழ் சமூகத்திற்கு ஆறுதல் அளிக்கும் நல் அறிகுறியாகும்.

மாற்றத்தை, தூய்மையாக்கலை பற்றி பேசுகின்ற இந்த தருணத்தில் தமிழ் சமூகம் தன்னை பீடித்துள்ள பீடைகளை களைந்து, புதிய போதையற்ற தேசம் நோக்கிய பாதையை ஆரம்பிக்கட்டும். அதற்கு அனைவரும் ஒன்றாக கரங்களை கலைப்பீடத்துடன் இணைத்திடுவோம். நல்ல சிந்தனையுள்ள அனைவரும் தமிழ் தேசிய ஆன்மாவை தேசத்தினை இருப்பை பாதுகாக்க அணி திரண்டு ஆதரவை வெளிப்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
landslide samui2 696x522 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்சரிவு அகற்றும் ஊழியர் மீது தாக்குதல்: கட்டுகஸ்தோட்டையில் நபர் கைது – வீடியோ வைரல்!

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு காரணமாக குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில்...

1763436612 MediaFile 1
இந்தியாசெய்திகள்

அரியானாவில் கடுமையான மூடுபனி: 35+ வாகனங்கள் மோதல் – பலர் படுகாயம்!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இன்று காலை வீதிகள் தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி சூழ்ந்த காரணத்தினால்,...

1696297899 1696296365 Muder L
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பமுணுகம கொலை: நிலத்தகராறில் மூத்த சகோதரரால் தம்பியைத் தாக்கிக் கொலை!

பமுணுகம, சேதவத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த...

1765346597 Rebuilding Sri Lanka 6
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த முகாமைத்துவக் கொள்கையை புதுப்பிக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கொள்கையை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...