19 3
இலங்கைசெய்திகள்

போக்குவரத்து தடை – நெடுந்தீவை பத்திரமாக சென்றடைந்த பயணிகள்

Share

போக்குவரத்து தடை – நெடுந்தீவை பத்திரமாக சென்றடைந்த பயணிகள்

யாழ். (Jaffna) நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து நேற்று தடைப்பட்டிருந்த நிலையில் குறிகாட்டுவானில் இருந்து பயணிகள் குமுதினிப்படகு மூலம் இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

திருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக மாற்று படகு சேவையும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், திருத்த வேலை செய்வது பயனளிக்காத நிலையில் வடதாரகை சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்தை தொடர்ந்து நெடுந்தீவில் இருந்து குமுதினிப் படகு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்துள்ளது.

மாலை முதல் துறைமுகப் பகுதியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் , நோயாளர்கள் என சுமார் 60 பேர் வரையில் காத்திருந்து பயணத்தினை தொடர்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...