இலங்கைசெய்திகள்

உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து

Share
10 58
Share

உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து

வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து வவுனியா – அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...