யாழ்.தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் !
இலங்கைசெய்திகள்

யாழ்.தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் !

Share

யாழ்.தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் !

தையிட்டி விகாரைக்கு அண்மையில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தையிட்டியில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்த நிலையிலேயே தற்போது போராட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய(03.07.2023) போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

 

rtjygg 1

இந்த போராட்டமானது நாளையதினமும் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமை போன்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போராட்டமானது இன்று (02.07.2023) மற்றும் நாளை (03.07.2023) ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராகவும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு அனைவரையும் தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமையாகப் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...