உலக மனக் கணிதப் போட்டியில் யாழில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்பு
உலக மனக்கணிதப் போட்டியில் யாழ் (Jaffna) திருநெல்வேலியில் (Tirunelveli) இருந்து முப்பது மாணவர்கள் பங்குப்பற்றவுள்ளனர்.
குறித்த உலகளாவிய UCMAS மனக் கணித போட்டியானது இந்திய (India) தலைநகர் டெல்லியில் (Delhi) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் முப்பது நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து மேற்படி போட்டியில் 103 மாணவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
இதனடிப்படையில், யாழ். திருநெல்வேலி ucmas centre இல் இருந்து இந்த போட்டியிற்கு முப்பது மாணவர்கள் பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.