tamilni 173 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர் நிலத்தை அபகரிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே

Share

தமிழர் நிலத்தை அபகரிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே

தமிழர் நிலத்தை சுவீகரிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினுடைய ஒரு பகுதியே அராலி முதல் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் நேற்று(10.12.2023) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சில வருடங்களுக்கு முதல் இலங்கை அரசினுடைய இராணுவமும் கடற்படையும் இணைந்து கரையோரங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் அராலி முதல் பொன்னாலை வரையான இடங்களில் கண்டல் தாவரங்களை நாட்டினர்.

இன்று அரசினுடைய ஒரு ஆக்கிரமிப்பு திணைக்களமாக வடகிழக்கிலே தொழில்பட்டு கொண்டுள்ள வன உயிரியல் திணைக்களம், கண்டல் தாவரங்களை பாதுகாக்க போகின்றோம் என்ற போர்வையில் அராலி முதல் பொன்னாலை வரையான பிரதேசங்களை ஆக்கிரமித்து சுவீகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அரசினுடைய திட்டமிட்ட சதி முயற்சியாகும்.

தமிழர் நிலத்தை சுவீகரிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினுடைய ஒரு பகுதி இதனை அனுமதித்தால் இலங்கையின் வடக்கிலே இருக்கின்ற 50ஆயிரத்துக்கும் அதிகமான கடற்தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பசியினால் வாட வேண்டும்.

தமிழர் தாயகம் பறிபோகும் சிங்கள குடியேற்றம் வரும். சிங்கள கடற்றொழிலாளர்கள் தமிழகத்திலே வாடிகளை அமைப்பார்கள். எமது கடற்றொழிலாளர்கள் புலம்பெயர நேரிடும்.

ஆகவே இதற்கு எதிராக எமது எதிர்ப்பினை பதிவு செய்து கொள்ளுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் போராட்டத்தினுடைய எழுச்சி தன்மை முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...