ஜீவன் தியாகராஜா
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் முயற்சி!

Share

யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்களை அமைப்பதற்கு படையினர், யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களுக்கும் இடமளிப்பது இல்லை என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால் அனுமதி வழங்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வடக்கு மாகாண ஆளுநர், வெசாக் அலங்காரங்களை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மாநகர சபை பதில் மேயரிடம் நேரடியாகக் கோரியிருந்தார். அதற்கு அமைவாக இணையவழியில் மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போது முன்னரே அனுமதி கோரவில்லை என்றும், வேண்டுமென்றே வெசாக் அன்று அனுமதி கோரியதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் எழுத்துமூலம் அனுமதி கோரினால் ஆராயலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனது உத்தரவை உதாசீனப்படுத்தியதால், மாநகர சபையை கலைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். அதற்குரிய வழிகாட்டல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில தரப்புக்களால் வழங்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

அதற்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றை முன்னெடுக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்காக சில ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் அவர் அணுகியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...