24 6756d8c892f60
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்: யாழ். எம்.பி. அர்ச்சுனா சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் சாட்சியம்!

Share

தனக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தான் தற்போது ஜெனீவாவில் இருந்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியக் குழுவிடம் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னால் 77 நாட்கள் பேச முடியாதபடி தற்போதைய சபாநாயகர் அனுமதி மறுத்தது மற்றும் தன்னுடைய ஒலிவாங்கியை (மைக்ரோபோன்) செயலிழக்கச் செய்தது போன்ற தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டது குறித்து தான் முறைப்பாடு செய்ததாகவும், அது தொடர்பான சாட்சியங்களை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பாதுகாப்பை நீக்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் 323 கொள்கலன்கள் சம்பவம் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக, தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை மற்றும் தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் தான் சாட்சியம் அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

தான் சாட்சியம் அளித்த விடயங்கள் தொடர்பாக, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் விரைவில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...