24 6756d8c892f60
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்: யாழ். எம்.பி. அர்ச்சுனா சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடம் சாட்சியம்!

Share

தனக்கு இழைக்கப்பட்ட சில அநீதிகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தான் தற்போது ஜெனீவாவில் இருந்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியக் குழுவிடம் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னால் 77 நாட்கள் பேச முடியாதபடி தற்போதைய சபாநாயகர் அனுமதி மறுத்தது மற்றும் தன்னுடைய ஒலிவாங்கியை (மைக்ரோபோன்) செயலிழக்கச் செய்தது போன்ற தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டது குறித்து தான் முறைப்பாடு செய்ததாகவும், அது தொடர்பான சாட்சியங்களை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பாதுகாப்பை நீக்க எடுத்த நடவடிக்கைகள் மற்றும் 323 கொள்கலன்கள் சம்பவம் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக, தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை மற்றும் தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் தான் சாட்சியம் அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

தான் சாட்சியம் அளித்த விடயங்கள் தொடர்பாக, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் விரைவில் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...