24 6650fd5bd57cb
இலங்கைசெய்திகள்

யாழிலிருந்து தீவகப்பகுதிகளுக்கான படகு சேவை இடைநிறுத்தம்

Share

யாழிலிருந்து தீவகப்பகுதிகளுக்கான படகு சேவை இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும்(25) ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வளிமண்டல திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று (மே 24) காலை 05.30 மணியளவில் 15.0°N மற்றும் 88.4°Eக்கு அருகில் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து 2024 மே 25 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக குவிய வாய்ப்புள்ளதுடன் அதன்பிறகு, அது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக அதே பகுதியில் தீவிரமடையும் என்பதுடன் மிக பலத்த காற்று (60-70) kmph, உடன் கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டது.

காரணமாக பொதுமக்கள் பாதுகாப்புகருதி குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுகளுக்கான கடற்போக்குவரத்துகள் நாளை இடம் பெறமாட்டாது. நயினாதீவிற்கான படகு சேவைகள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...