2 4
இலங்கைசெய்திகள்

அநுர அரசுக்கு பயமில்லை! வளங்களுக்காக போராடுவோம் – யாழ் கடற்றொழிலாளர்கள் பகிரங்கம்

Share

அநுர அரசுக்கு பயமில்லை! வளங்களுக்காக போராடுவோம் – யாழ் கடற்றொழிலாளர்கள் பகிரங்கம்

புதிய அரசாங்கம் எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் செய்வோம் என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் இந்தியாவின் இழுவைப் படகுகளை கட்டாயப்படுத்தி நாங்கள் ஓரளவு தொழில் செய்துகொண்டு இருந்தோம்.

ஆனால் புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவைமடி படகுகள் எங்களது வளங்களை அழிக்கின்றது. ஆகையால் எமது தொழிலாளிகளின் வலைகளும் இல்லாமல் போகின்றன.

புதிதாக பதவியேற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு நாங்கள் இதனை புதிதாக சொல்லவேண்டிய அவசியமில்லை.

கடந்த காலத்தில் நாங்கள் போராட்டத்தை நடாத்தியபோது, இந்திய இழுவைப் படகுகள் குறித்து தமது தலைவருக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னர் இந்த இழுவை படகுகளை நிறுத்துமாறு எமது சம்மேளனம் சார்பாக நாங்கள் பல கோரிக்கை கடிதங்களை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளோம்.

இருப்பினும் நெடுந்தீவு தொடக்கம் சுண்டிகுளம் வரையிலான கடற் பகுதியில் இந்திய இழுவை படகுகள் எமது வளங்களை அளிக்கின்றன.

இவற்றினை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவினை எடுக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் செய்யும் மக்களை இணைத்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை செய்வோம்.

இப்பொழுது புதிய அரசாங்கம் ஒன்று வந்திருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது தண்ணியால் அடிப்பார்கள், கட்டையால் அடிப்பார்கள் அவற்றையெல்லாம் பற்றி எங்களுக்கு பயமில்லை.

எங்களது பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாங்கள் போராட்டம் செய்வோம். எனவே ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவு கூற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...