rtjy 176 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்.விமான நிலையம் தொடர்பில் வழங்கியுள்ள அனுமதி

Share

யாழ்.விமான நிலையம் தொடர்பில் வழங்கியுள்ள அனுமதி

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான விமானமேறல் அறவீட்டு வரிச்சலுகையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வரிச்சலுகை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்களை மலிவு விலையில் வழங்குவதற்காகவும், அதனூடாக விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு, சர்வதேச விமான நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில், 50 சதவீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும் இந்த வரிச்சலுகை காலம் கடந்த 11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வரிச்சலுகை காலத்தை நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...