rtjy 176 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்.விமான நிலையம் தொடர்பில் வழங்கியுள்ள அனுமதி

Share

யாழ்.விமான நிலையம் தொடர்பில் வழங்கியுள்ள அனுமதி

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான விமானமேறல் அறவீட்டு வரிச்சலுகையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வரிச்சலுகை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்களை மலிவு விலையில் வழங்குவதற்காகவும், அதனூடாக விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு, சர்வதேச விமான நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில், 50 சதவீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும் இந்த வரிச்சலுகை காலம் கடந்த 11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வரிச்சலுகை காலத்தை நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...