8 48
இலங்கைசெய்திகள்

யாழ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

Share

யாழ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(27.12.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இவர் கடந்த 8ஆம் திகதி மகள் வீட்டுக்கு செல்வதற்காக கல்வியங்காடு – ஜமுனா வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

பின்னர் ஓய்வு எடுப்பதற்காக அந்த வீதியில் சிறிது நேரம் நின்றதுடன் அவருக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கல்வியங்காடு பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேளை அந்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் நின்ற முதியவர் மீது தாக்கியுள்ளது.

இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சையின் பின் கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், இன்று(27) காலை அவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...