19 10
இலங்கைசெய்திகள்

யாழில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்து: ஒருவர் பலி…சாரதி தலைமறைவு

Share

யாழ்ப்பாணம் (Jaffna) – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூரிலிருந்து – சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் பலாலியிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதான சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...