24 6663220dd9788
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை

Share

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மாவத்தகம, பிலஸ்ஸ மஸ்வெவ என்ற முகவரியில் வசித்து வந்த 62 வயதுடைய மேரி ரூட் பெரேரா என்ற பெண்ணே தனது வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

2 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இத்தாலியில் வசிப்பதாகவும், அவர் சில காலம் இத்தாலியில் பணியாற்றிய பின்னர் கடந்த 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்து தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

மேலும் வீட்டில் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கின்றனர்.

இந்தக் கொலையில் புதையல் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துறவி ஒருவருடன் வந்த பலர் புதையலிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் மாணிக்கக் கற்கள் அல்லது தங்கத் துண்டுகளை காட்டி அந்தப் பெண்ணிடம் கொடுத்து சுமார் 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் மெதிரிகிரிய பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாக தற்போது இனங்காணப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மேலதிகமாக, அந்த வீட்டில் வேலைக்காக வந்த தம்பதியர் பற்றிய தகவல்களையும் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...