10 24
இலங்கைசெய்திகள்

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை சந்தித்த தமிழரசு எம்.பிக்கள்

Share

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சரான ஹரி ஆனந்தசங்கரியை (Gary Anandasangaree) தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (10) கொழும்பில் (Colombo) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam), ஞா. சிறிநேசன் (G. Sirinesan), ஸ்ரீநாத் (I.Srinath), ச.குகதாசன் (K. S. Kugathasan) மற்றும் து. ரவிகரன் (T. Raviharan) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான தமிழ் மக்களின் நிலை, தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் போக்கு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் கனடா அரசாங்கத்திடம் தமிழர்களுடைய எதிர்பார்ப்பு என்பன தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான இரா.சாணக்கியன் (R.Shanakiyan) சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோர் இந்தியாவின் – தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...