24 10
இலங்கைசெய்திகள்

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

Share

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

நாட்டின் தற்போதைய நிலைக்கு தமது கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றின் போது இளைஞர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க பதில் அளித்தபோதே இந்த கருத்துக்களை வெளியிட்டார்

அத்துடன், ஜே.வி.பி கடந்த கால ஆயுதக் கிளர்ச்சிகளில் இருந்து விலகி இருப்பது போல் பாவனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது, அவர்களின் ஒரு தவறான தந்திரோபாயமாகும். உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கும் தவறை ஜே.வி.பி மீண்டும் செய்வதாக விமர்சித்த ஜனாதிபதி, கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பது புத்திசாலித்தனமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு மேலும் போராட்டங்களை எதிர்கொண்டால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அவர் இதன்போது எச்சரித்துள்ளார்

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது என்று ரணில் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...