24 10
இலங்கைசெய்திகள்

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

Share

நாட்டின் நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு: ரணில் பகிரங்கம்

நாட்டின் தற்போதைய நிலைக்கு தமது கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றின் போது இளைஞர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க பதில் அளித்தபோதே இந்த கருத்துக்களை வெளியிட்டார்

அத்துடன், ஜே.வி.பி கடந்த கால ஆயுதக் கிளர்ச்சிகளில் இருந்து விலகி இருப்பது போல் பாவனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது, அவர்களின் ஒரு தவறான தந்திரோபாயமாகும். உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கும் தவறை ஜே.வி.பி மீண்டும் செய்வதாக விமர்சித்த ஜனாதிபதி, கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பது புத்திசாலித்தனமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு மேலும் போராட்டங்களை எதிர்கொண்டால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அவர் இதன்போது எச்சரித்துள்ளார்

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது என்று ரணில் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...