அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி போதனை செய்யும் அமெரிக்கா இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணைபோகுகிறது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் நட்பு நாடாகவே ஈரான் உள்ளது. இலங்கையின் உள்ளக விவகாரங்களிலும், இலங்கைக்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈரான் தலையிடவில்லை.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டுள்ளது. உலகுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி போதனை செய்யும் அமெரிக்கா இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணைபோகுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது.
மேலும், அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மலினப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.