tamilni 261 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடுமையான வட்டி விகிதங்களின் உயர்வு பின்னர், உலகப் பொருளாதாரம் மெதுவாக இறங்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்கள் ஆண்டின் நடுப்பகுதியில் குறையத் தொடங்கும் என்று நிர்வாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தங்களில் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர், “நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த மென்மையான இறங்குதலுக்கு உலகப் பொருளாதாரம் இப்போது தயாராக உள்ளது என்று துபாயில் நடந்த உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா போன்ற முன்னணி பொருளாதாரங்களில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நீடிக்கும் போர் உலகப் பொருளாதாரங்களை பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கடலில் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை தொடர்ந்தால் அது ஒட்டுமொத்த உலகிற்கும் மிகவும் சிக்கலாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...