1 14
இலங்கைசெய்திகள்

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

Share

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மின்சார தடை தொடர்பான விரிவான விசாரணையை மின்சக்தி அமைச்சும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால கூறியுள்ளர்.

இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக 2023 டிசம்பர் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அதேபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்வாறனாதொரு பின்னணியில், இன்று ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மீண்டும் இது தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...