1 14
இலங்கைசெய்திகள்

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

Share

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மின்சார தடை தொடர்பான விரிவான விசாரணையை மின்சக்தி அமைச்சும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால கூறியுள்ளர்.

இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக 2023 டிசம்பர் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அதேபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்வாறனாதொரு பின்னணியில், இன்று ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மீண்டும் இது தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...