24 665d4628786ef
இலங்கைசெய்திகள்

ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க அழைப்பு

Share

ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க அழைப்பு

ஈராக்கின் (Iraq) பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஈராக் தூதரகத்தின் பொறுப்பாளர் முஹம்மது ஒபைட் அல்-மசூதி (Mohammed Obaid Jabur Al-Masoudi) இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் ( Nalin Fernando) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

ஈராக்கில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், விசா பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இந்த தூதரகம் மூலம் செயற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...