27 1
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவியில் இருந்து விலகும் எரான் விக்ரமரத்ன

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் மொரட்டுவை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து எரான் விக்ரமரத்ன விலகவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் அண்மைக்காலமாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருகின்றது.

கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ள நிலையில், மேலும் சிலர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துவக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ தொகுதி அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பதவி விலகல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...