10 7
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியது ஈரான்

Share

ஈரான்(iran) 1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானில் சமீபத்தில் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மசூத் பெசேகியன் தலைமையில் நடைபெற்றதாக செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

புதிய பாலிஸ்டிக் ஏவுகணை குறித்து தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பு திறன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட 16 மீட்டர் நீளமுள்ள புதிய ஏவுகணை, எந்த நாடும் ஈரானை தாக்காது என்பதை உறுதி செய்கிறது என்று கூறினார்.

ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இஸ்ரேலை(israel) நேரடியாகத் தாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...