24 66207617d18a1
இலங்கைசெய்திகள்

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

Share

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு நேற்றும், நேற்று முன்தினமும் விஜயம் செய்து அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போதான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் நேற்றைய தினம் ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர்.

ஈரானிய ஜனாதிபதி எதிர்வரும் 24ம் திகதி மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கி, உமா ஓயாவிற்கு விஜயம் செய்வார் எனவும் அதே தினம் அவர் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போதான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தலைமையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவுப் பிரிவுகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது அனைத்து புலனாய்வுப் பிரிவுகளும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் இலங்கை விஜயம் செய்திருந்தார்.

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அப்போதைய ஈரான் ஜனாதிபதி அஹமட் நிஜாட் ஆகியோர் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை அமெரிக்க தூதரக மட்டத்தில் அதிகாரபூர்வமாக இதுவரையில் எதிர்ப்பு வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...