tamilni 469 scaled
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள்

Share

மியன்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு என்பன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த நான்கு முறைப்பாடுகளின் அடிப்படையில் மூன்று இலங்கையர்கள் மற்றும் சீன பிரஜை உட்பட 04 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் தீவிரவாத குழு ஒன்றின் முகாமில் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை இளைஞர்கள் இந்த அவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் 32 இலங்கையர்களை பல சந்தர்ப்பங்களில் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மியன்மாரின் இணைய அடிமைத்தனத்தில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதற்காக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே யங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியை நாடியுள்ளது.

இதற்கிடையில் மியன்மார் தீவிரவாத முகாமில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில், தூதுவர் ஜனக பண்டார ஆறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஒன்றை அறிவித்துள்ளார்.

இந்தியா, பூட்டான், பங்களாதேஸ் மியான்மர், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை பத்திரமாக தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கு அயராது உழைத்து வருவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா, பூட்டான், பங்களாதேஸ் மியான்மர், தாய்லாந்து மற்றும் நேபாளம் உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுடன் கலந்துரையாடியபோது, 200 க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களும் முகாமின் பிடியில் இணைய அடிமைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சாத்தியமான முன்னேற்றத்தின் அடையாளமாக, சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்க மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை டுபாயில் இருந்து மியன்மார் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு முகாமுக்கு இலங்கையர்களை ஒரு குழு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...