tamilni 469 scaled
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள்

Share

மியன்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு என்பன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த நான்கு முறைப்பாடுகளின் அடிப்படையில் மூன்று இலங்கையர்கள் மற்றும் சீன பிரஜை உட்பட 04 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் தீவிரவாத குழு ஒன்றின் முகாமில் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை இளைஞர்கள் இந்த அவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் 32 இலங்கையர்களை பல சந்தர்ப்பங்களில் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மியன்மாரின் இணைய அடிமைத்தனத்தில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதற்காக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே யங்கூனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியை நாடியுள்ளது.

இதற்கிடையில் மியன்மார் தீவிரவாத முகாமில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில், தூதுவர் ஜனக பண்டார ஆறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி ஒன்றை அறிவித்துள்ளார்.

இந்தியா, பூட்டான், பங்களாதேஸ் மியான்மர், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை பத்திரமாக தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கு அயராது உழைத்து வருவதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா, பூட்டான், பங்களாதேஸ் மியான்மர், தாய்லாந்து மற்றும் நேபாளம் உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுடன் கலந்துரையாடியபோது, 200 க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களும் முகாமின் பிடியில் இணைய அடிமைகளாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சாத்தியமான முன்னேற்றத்தின் அடையாளமாக, சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்க மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதுவர் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை டுபாயில் இருந்து மியன்மார் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு முகாமுக்கு இலங்கையர்களை ஒரு குழு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...