24 667bb751efa0c
இலங்கைசெய்திகள்

கடற்படை அதிகாரியின் மரணம் விவகாரம்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Share

கடற்படை அதிகாரியின் மரணம் விவகாரம்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் (Jaffna) – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரரின் மரணம் தொடர்பான வழக்கில் கைதான பத்து இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ஜுலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (25) அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில், கடற்படை வீரர் உயிரிழந்தார்.

இதன்போது, 10 இந்திய கடற்றொழிலாளர்களுடன் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட10 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், அவர்களின் படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டது.

அதேவேளை, கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியமை மற்றும் ஆபத்தான விதத்தில் படகை செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் வழக்கை எதிர்வரும் ஜீலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழையும் போது கைது செய்யப்பட்டால் கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதே வழமை.

இருப்பினும், குறித்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் நேரடியாக பொலிஸார் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...