இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் – விமான நிலையத்தில் கசிந்த உண்மை

33
Share

அரசியல்வாதிகளுக்காக வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் இலங்கையர்கள் – விமான நிலையத்தில் கசிந்த உண்மை

இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படவில்லை என விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக வாக்களிக்க மக்கள் நாடு திரும்புகிறார்கள் என தகவல்கள் வெளியாகின.

எனினும் அந்தளவு அதிகரிப்பான பயணிகள் இதுவரை வரவில்லை என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தமது நிறுவனத்தின் மேலதிக விமானங்களை இலங்கைக்கு மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு விமான நிறுவனமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தனியார் விமானங்கள் இலங்கை ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதைத் தவிர வேறு எந்த கூடுதல் விமானங்களும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரியதொரு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...