வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னர் விண்ணப்ப காலம் 2025.11.01 முதல் 2025.11.30 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவிய பேரிடர் சூழ்நிலை காரணமாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பின்வரும் தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் முதல் அல்லது இரண்டாம் தவணையில் கல்விப் பொதுத் தரச் சான்றிதழ் தேர்வை எழுதிய மாணவர்கள். 2025 ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தரத் தேர்வை எழுதிய மாணவர்கள்.
இந்த வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஒன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.studentloans.mohe.gov.lk

