1 5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய அனைத்து புலனாய்வுப் பிரிவுகளிலிருந்தும் புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தற்போதும் புலனாய்வு அறிக்கைகள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆராய தனியான புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழு, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இந்த குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்படாத வகையில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...