1 5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அறிக்கைகள் கோரல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முன்னர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய அனைத்து புலனாய்வுப் பிரிவுகளிலிருந்தும் புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேர்தல் காலத்தில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தற்போதும் புலனாய்வு அறிக்கைகள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15ஆம் திகதிக்கு பின்னர் தற்போதைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் குறித்து ஆராய தனியான புலனாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழு, வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இந்த குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.

ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்படாத வகையில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...