24 66627ae96b1b3
இலங்கைசெய்திகள்

4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் வேண்டுகோள்

Share

4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் வேண்டுகோள்

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொதுமக்களின் ஆதரவுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.

கம்பகா (Gampaha) – களனியில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த நபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை மீது பொதுமக்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம் என்றும், பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் தங்கள் கடமைகளைச் செய்வதால், அந்தத் தவறுகளை சரி செய்ய காவல்துறை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து பொது மக்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...