9 36
இலங்கைசெய்திகள்

விசா செயலாக்கம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை

Share

விசா செயலாக்கம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை

வெளிநாட்டு நிறுவனத்திற்கு விசா செயலாக்கத்தை வழங்கியதில் (அவுட்சோர்சிங் செய்ததில்) சர்ச்சைக்குரிய “இ-விசா” மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு கூட்டமைப்பை விலக்கி, இணைய விசா விண்ணப்ப தளத்தை அரசாங்கம் மீண்டும் செயலாக்கியுள்ளது

முன்னதாக, ரணில் விக்ரமசிங்கவின் விசா ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது தொடர்பிலேயே உயர் நீதிமன்ற தீர்ப்பும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...