tamilni 297 scaled
இலங்கைசெய்திகள்

நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு

Share

நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் பல பருவங்களில் அவ்வப்போது கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊழியர்கள் குழுவொன்று விவசாய அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் சில அதிகாரிகளும் அரிசி இருப்பு காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட 05 களஞ்சியசாலைகளில் கொள்வனவு செய்யப்பட்ட அரிசி கையிருப்பு காணாமல் போயுள்ளதாகவும், அந்த கையிருப்புகளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...