22 3
இலங்கைசெய்திகள்

சாணக்கியனிடம் இருக்கும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சாட்சியங்கள்: சபையில் பகிரங்கம்

Share

சாணக்கியனிடம் இருக்கும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு சாட்சியங்கள்: சபையில் பகிரங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan)தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கான ஆதாரங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய குழுக்களை தொடர்பு படுத்தி தர முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்போது, அவர் தொடர்ந்தும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானை அழைத்து விசாரணை நடத்தினார்கள், கைது செய்வதென்பது காவல்துறையினரின் வேலை.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தொடர்பான பல தகவல்கள் எங்களிடம் உள்ளன.இது தொடர்பாக நான் பாதுகாப்பு செயலாளருக்கும் அறிவித்துள்ளேன்.

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். வாய்ப்பு கிடைத்தால் சாட்சியமளிக்கக்கூடிய குழுக்களை தொடர்பு படுத்தி தர முடியும்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...

18 4
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு நெருக்கடி: ₹11.9 லட்சம் கோடி வரியைத் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச்...

17 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதல்: சவுதி மற்றும் ஓமன் விமான நிலையங்களில் 131 இலங்கையர்கள் தவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக சவுதி...

16 4
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு சேவையில் 15,839 புதிய நியமனங்கள்: அமைச்சரவை அதிரடி அனுமதி!

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில்,...