24 667b6a3d41a43 4
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Share

கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய(Harsha ilukpitiya) தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீட்டிப்பு 10 வருடங்களை கடந்த பின்னரும் அதற்கு ஒரு வருட செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுமாயின் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் வரை மாத்திரமே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, நவம்பர் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரணக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...