24 6604de1f9eb7f
இலங்கைசெய்திகள்

யாசகம் பெறும் குழந்தைகள் தொடர்பில் தகவல்

Share

யாசகம் பெறும் குழந்தைகள் தொடர்பில் தகவல்

நாடு முழுவதும் யாசகம் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரவியல் மற்றும் தரவுக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் முகமாக குருநாகல், அநுராதபுரம், அம்பாறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அரசு சாரா அமைப்பு நடத்திய முந்தைய ஆய்வுகளின் மூலம், நாடு முழுவதும் 15,000 யாசகம் பெறும் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர்களை கொண்டு யாசகம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சானக உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...