12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

Share

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள் அறிவிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) வலியுறுத்தியுள்ளது.

அதிக விலைக்கு விற்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகளையடுத்து, அதிகாரசபை 1977 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குறித்து அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெந்தலுவ – பறக்கடுவ பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி மாவட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த உணவக உரிமையாளர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு ரூபா 100,000 தண்டம் விதிக்கப்பட்டது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...